13 வயது தங்கச்சியை 6 மாதம் கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்..,வலைவீசி தேடி வரும் போலீஸ்.., சென்னையில் பயங்கரம்!!13 வயது தங்கச்சியை 6 மாதம் கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்..,வலைவீசி தேடி வரும் போலீஸ்.., சென்னையில் பயங்கரம்!!

தங்கச்சியை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்

சென்னையில் மூன்று அண்ணன்கள் தங்கச்சியை கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் சென்னையின் முக்கிய பகுதியான  புதுவண்ணாரப்பேட்டை அருகே உள்ள தெருவில் வசித்து வந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வந்த சிறுமி கடந்த 2 நாட்களாக சற்று சோர்வாக உடல் நலம் குன்றி காணப்பட்டுள்ளார். இதை பார்த்த பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்ததில் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அண்ணன் முறை வரும் மூன்று பேர் தான் அவரை சீரழித்து என்று தெரிய வந்தது. உடனே இது குறித்து காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். மேலும் இது குறித்து விசாரணை தொடங்கிய காவல்துறை, சிறுமியின் தந்தையின் அண்ணன் மகன்களான அஜய், கண்ணா பாண்டா மற்றும் சிறுமியின் தாயின் அக்கா மகனான மனோஜ்  ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தில்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து மனோஜ் என்பவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லால் சலாம் – லவ்வர் ரேஸில் புதிய திருப்பம்.., ஓடிடி தளத்தில் போட்டி போட்ட படக்குழு – முழு லிஸ்ட் இதோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *