எப்பா., அது கைபுள்ளப்பா.. 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொடூர கொலை - இதயத்தை ரணமாக்கும் தந்தையின் வீடியோ!!எப்பா., அது கைபுள்ளப்பா.. 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொடூர கொலை - இதயத்தை ரணமாக்கும் தந்தையின் வீடியோ!!

பாலியல் கொடுமை

இன்றைய சூழ்நிலையில் சிறு குழந்தைகள் என்று கூட பாராமல் சில நரகாதூரன்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அநியாயமாக கொலை செய்யப்படுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுச்சேரி பகுதியில் நடந்துள்ளது. அதாவது புதுச்சேரி சோலை நகர் பகுதியில் வசித்து வந்த 9 வயது சிறுமி அருகில் உள்ள அரசு பள்ளி ஒன்றில்  5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமி எப்போதும் பள்ளி கூடத்திற்கு தனியாக நடந்து செல்லும். மேலும் தெருக்கார சக தோழிகளுடன் விளையாடிக் வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி வழக்கம் போல், தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். பொழுது கழிந்து கொண்டு போன நிலையில், அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த நிலையில் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், ஒரு சிசிடிவி கேமராவில் சோதனை நடத்தி வந்தனர். இதற்கிடையில் அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக ஒரு மூட்டை கிடப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கு போலீஸ் சென்று பார்த்த போது காணாமல் போன சிறுமி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.

உடனே அவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குற்றவாளிகளை போலீஸ் தேட தொடங்கிய நிலையில்,  கருணாஸ், விவேகானந்தன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் தான் செய்தது என்று ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து இருவர் மீது கொலை மற்றும் போக்சோ கேஸ் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுமியின் தந்தை ‘கஞ்சா குடிக்கிங்க 7 பேர் சேர்ந்து கை,கால்களை கட்டிப்போட்டு செஞ்சிருக்காங்கப்பா… கை புள்ளப்பா அது’ என்று அவர் அழும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

வானில் பறந்த விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பிரச்சனை… தரையில் விழுந்ததால் 5 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *