9 வயது சிறுமி கொலை வழக்கில் தொடரும் திகில்.., குதிகால் ரத்த மாதிரிகள்.., அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!9 வயது சிறுமி கொலை வழக்கில் தொடரும் திகில்.., குதிகால் ரத்த மாதிரிகள்.., அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

9 வயது சிறுமி கொலை

புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி 5ம் வகுப்பு படித்து வந்த அரசு பள்ளி மாணவி ஆர்த்தி மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை தேட ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம் (05.03.2024) ஒரு சாக்கடை கால்வாயில் ஒரு மூட்டை கிடப்பதாக தகவல் கிடைக்க, மாயமான சிறுமி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மேலும் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்த நிலையில் குற்றவாளிகளை முழுவீச்சில் காவல்துறை தேடி வந்தது. இதனை தொடர்ந்து கருணாஸ்(19) மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வந்ததில் அவர்கள் நாங்கள் தான் செய்தோம் என்று ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பல தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த வழக்கு சம்பந்தமாக ஏழு பேரை விசாரணை நடத்தி வந்தனர். அதில் இரண்டு பேர் ஒப்புக்கொண்ட நிலையில், மீதமுள்ள 5 பேர் எங்களுக்கு இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் அந்த 5 பேரின் குதிகால் ரத்த மாதிரிகளும் சிறுமியின் ரத்த மாதிரிகளும் ஒரே மாதிரி இருந்தால் தண்டனை கொடுக்கப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. அதன்படி அந்த ரத்த மாதிரிகளை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இன்று காலை முதல் சோதனை போய் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மாவீரன் வீரப்பனுக்கு நினைவுத் தூண்.., திறந்து வைத்த ஆளும் கட்சி வேட்பாளர்.., எந்த பகுதியில் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *