தமிழக போக்குவரத்து ஊழியர்களே.., அகவிலைப்படி உயர்வு எப்போது?.., 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு என்ன?தமிழக போக்குவரத்து ஊழியர்களே.., அகவிலைப்படி உயர்வு எப்போது?.., 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு என்ன?

7ம் கட்ட பேச்சுவார்த்தை

சமீப காலமாக தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்காக போக்குவரத்து கழகம் அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின்  கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் தான் இருந்து வருகிறது. இதனால் கடந்த ஜன.9, 10 ஆகிய தேதிகளில்  வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் கையில் எடுத்த நிலையில்,  உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நேற்று சென்னை தேனாம்பேட்டையில் அரசுடன் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழகம் இறங்கியது. அதில், ” தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி, மேலும் ஒரு மாதத்திற்கு சேர்த்து தரப்படும் என்றும், ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி இருப்பதாகவும் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

அந்த நடிகர்னா கண்டிப்பா அந்த மாதிரி செய்வேன்.., ஓப்பனாக பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *