CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ! விருப்பம் தெரிவித்த CSK அணி வீரர் - ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவர்கள் என கருத்து !CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ! விருப்பம் தெரிவித்த CSK அணி வீரர் - ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவர்கள் என கருத்து !

CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா. கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற போட்டிதான் IPL. 20 ஓவர்கள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் சேர்ந்து 10 அணிகள் கொண்டதாக இந்த IPL தொடர் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மும்பை அணி நிர்வாகம் விளக்கம் அளித்தும் யாரும் அதை ஏற்கவில்லை. அந்த வகையில் CSK அணியின் முன்னாள் வீரர் அம்பட்டி ராயுடு தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

2025 ல் ஐபில் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெற்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரோஹித் சர்மா வழிநடத்த வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பட்டி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம் ! முதல்முறை ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ராபர்ட் டவுனி !

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் ரோஹித் சர்மா தொடர்ந்து 5 அல்லது 6 ஆண்டுகள் ஐபில் விளையாடலாம். அவர் கேப்டன் ஆக விரும்பினால் கூட ரசிகர்கள் அதனை ஏற்பார்கள் என்றும், ரோஹித் சர்மா எளிதில் எந்த அணியிலும் கேப்டனாக முடியும் என அம்பட்டி ராயுடு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *