புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

சிறுவன் கொலை

இந்த உலகத்தில் எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டு போனாலும் மனிதனின் சில குணங்கள் மற்றும் எப்பொழுதும் மாறுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் தான் புதுச்சேரி சிறுமி பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வரை முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில், இப்பொழுது சிறுவன் பாலியல் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தர்மபுரி, மிட்டாரெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் மன்மதன் – சீதா தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். அந்த சிறுவன் வழக்கம் போல் விளையாட சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை விசாரணையை தொடங்கிய நிலையில், அந்த சிறுவன் அருகில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இளங்கோ என்ற இளைஞனை விசாரணை செய்த போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது, இளங்கோ அந்த சிறுவனிடம் பாலியல் சீண்டலில் நடந்து கொண்ட போது அண்ட் சிறுவன் கத்தியதால் கிணற்றில் தள்ளி விட்டேன் என்று ஒப்புக்கொண்டான். எனவே அந்த இளைஞனை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. 

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு.., முதல்வர் வெளியிட்ட அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *