தேர்தல் பத்திர விவகாரம்.., பாஜக நன்கொடையாக வாங்கியது இத்தனை ஆயிரம் கோடிகளா?., டாப் 4ல எந்த கட்சி இருக்கிறது?தேர்தல் பத்திர விவகாரம்.., பாஜக நன்கொடையாக வாங்கியது இத்தனை ஆயிரம் கோடிகளா?., டாப் 4ல எந்த கட்சி இருக்கிறது?

தேர்தல் பத்திர விவகாரம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த “தேர்தல் பத்திரம்” திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பல கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் SBI பேங்க் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.  இதனை தொடர்ந்து SBI பேங்க் 2019 – 2024ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்நிலையில் “தேர்தல் பத்திரம்” திட்டத்தின் மூலமாக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுக்கப்பட்ட குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நன்கொடை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தங்களது விவரங்களை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில்  நாட்டிலே அதிகமாக நன்கொடை வாங்கியதாக முதல் இடத்தில் இருக்கும் கட்சி தான் பாஜக. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. இந்த கட்சியை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், நான்காவது இடத்தில் பி ஆர் எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன. 

வாகன ஓட்டிகளே.., 2 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை குறைப்பு.., ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *