தமிழக மக்களே.., வெப்பத்தை தணிக்க வரும் கனமழை.., எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?.., வானிலை மையம் தகவல்!!தமிழக மக்களே.., வெப்பத்தை தணிக்க வரும் கனமழை.., எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?.., வானிலை மையம் தகவல்!!

கனமழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரிக்கும் நிலையில், மக்கள் வெளியே வரவே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சில முக்கிய பகுதிகளில் 120 டிகிரிக்கு மேல் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குளிரூட்டும் விதமாக சில இடங்களில் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடலோர பகுதிகளில் வருகிற மார்ச் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி மழை பெய்ய கூடும்.

அதுமட்டுமின்றி காரைக்கால் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருகிற மார்ச் 19 ஆம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவ கூடும். அதுமட்டுமின்றி சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் மருத்துவமனையில் திடீர் அனுமதி.., என்ன காரணம் தெரியுமா? கண்கலங்கிய ரசிகர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *