மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் 4 தையல் ! வீட்டில் உள்ள அலமாரியின் மீது மோதியதால் ஏற்பட்ட காயம் - சிகிச்சை பின் வீடு திரும்பிய மம்தா !மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் 4 தையல் ! வீட்டில் உள்ள அலமாரியின் மீது மோதியதால் ஏற்பட்ட காயம் - சிகிச்சை பின் வீடு திரும்பிய மம்தா !

மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் 4 தையல். மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் நெற்றியில் ரத்தம் வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

முதலில் மம்தா பானர்ஜிக்கு எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோ சயின்சஸ்க்கு மாற்றப்பட்டு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் மம்தா பானர்ஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு நெற்றியில் 4 தையல்கள் போடப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டள்ளது.

சீமானுக்கு விவசாயி சின்னம் கிடைக்குமா ? தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் – உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் !

மேலும் நடந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்திய போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரது வீட்டில் உள்ள அலமாரியின் மீது மோதியதில் அவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *