பெண்களே.., மேக்கப் இல்லாமல் முகம் பிரகாசமா ஜொலிக்க வேண்டுமா? அப்போ இதை Try பண்ணுங்க!!பெண்களே.., மேக்கப் இல்லாமல் முகம் பிரகாசமா ஜொலிக்க வேண்டுமா? அப்போ இதை Try பண்ணுங்க!!

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களின் முகத்தை பொலிவுடன் காண்பிக்க கண்ட கிரீம்களை போட்டு வருகிறார். அந்த கிரீம்கள் அந்த சமயத்தில் பொலிவுடன் காண்பிக்கும். அதை போட போட பின்விளைவுகள் ஏற்படும். முகத்தில் சரும பிரச்சனைகள், புண்கள் ஏற்படும் அளவுக்கு போகலாம். ஆனால் அதை எந்த பெண்ணும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே இயற்கை முறையில் பெண்கள் முகத்தை பொலிவாக்குவது என்பது அவசியமான ஒன்று.

முகப்பொலிவு என்பது ஒரு பெண்ணின் முகத்தில் பருக்கள் இல்லாமல் பிரகாசமாக இருப்பது தான். ஆனால் தற்போது எந்த பெண்ணுக்கும் அப்படி இருப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் பெண்கள் முகத்தை சரியாக பராமரிக்காமல் போனது தான். நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து எப்படி முகத்தை பிரகாசமாக்கலாம். அதற்கான ‘Face Pack” எப்படி  செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மக்களே.., மாரடைப்பு வருவதை  ஒரு மாதத்திற்கு முன்பே கணிக்கலாம்.., எப்படி தெரியுமா?.., இத தெரிஞ்சுக்கோங்க!!

  • கடலைப் பருப்பு
  • பச்சரிசி
  • கஸ்தூரி மஞ்சள்
  • தக்காளி
  • கேரட்
  • முள்ளங்கி
  • பால்
  • அதிமதுரம்
  • பாசிப்பயிறு
  • தண்ணீர்
  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் பச்சரிசி,  அதிமதுரம், கஸ்தூரி மஞ்சள், கடலை பருப்பு, பாசிப்பயறு உள்ளிட்டவைகளை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதையடுத்து முள்ளங்கி மற்றும் கேரட்டை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இதனை தொடர்ந்து உங்களுடைய முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு முகத்தை நன்றாக துடைத்து கொள்ளவும். அதன் பிறகு பாலை எடுத்து முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடவிய பிறகு, லேசாக காய்ந்ததும் முகத்தை மீண்டும் நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  • அப்புறம் தக்காளியை எடுத்துக் கொண்டு அதை  இரண்டாக நறுக்கி சர்க்கரையில் தொட்டு அதை முகத்தில் 5 நிமிடங்கள் தொடர்ந்து Scrub செய்யவும். இப்படி செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மறையும்.
  • சிறிது நேரம் கழித்து சுடு தண்ணீரில் ஆவி பிடிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகள் உடனே வெளியேறும்.
  • அதன்பின்னர் நீங்கள் அரைத்து வாய்த்த கேரட், முள்ளங்கியை முகத்தில் தடவி அதை 10 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி கொள்ளவும்
  • அதன் பின்னர் நீங்கள் முதலில் அரைத்து வைத்த பாசி பருப்பு கலவையை எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அதை முகத்தில் தேய்த்து கிட்டத்தட்ட 15 நிமிடம் கழித்து கழுவவும்.

இந்த ‘Face Pack’ இயற்கையாக செய்து கடைபிடித்தீர்கள் என்றால் உங்களுடைய முகம் மிருதுவாகவும், அழகாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் பெண்கள் பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டியது இருக்காது. எனவே உங்களுடைய முகத்தில் உள்ள சரும பிரச்சனைகள், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்க இந்த வழிமுறைகள் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *