ரஷ்யாவில் பயங்கரம்.., கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச் சூடு., 70 பேர் உயிரிழப்பு.., பிரதமர் மோடி கண்டனம்!!ரஷ்யாவில் பயங்கரம்.., கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச் சூடு., 70 பேர் உயிரிழப்பு.., பிரதமர் மோடி கண்டனம்!!

சமீபகாலமாக உலகில் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் தலைவிரித்து ஆடி வருகிறது.  அந்த வகையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 70 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில்  ஒரு கச்சேரி அரங்கேறியுள்ளது. அதில் ஏகப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் அரங்கத்துக்குள் ஒரு தீவிரவாத கும்பல் நுழைந்த நிலையில், சட்டென்று யோசிக்காமல் அங்கிருந்த மக்களை கண்மூடித்தனமான துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 70 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு உலக அளவில் பல்வேறு நாடுகளில்  சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி, ” இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்’ என தனது X வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்கிறாரா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *