நெருங்கும் மக்களவை தேர்தல்.., '100 நாள் வேலை ஊதியம்'.., மத்திய அரசு திடீர் அரசாணை வெளியீடு!!நெருங்கும் மக்களவை தேர்தல்.., '100 நாள் வேலை ஊதியம்'.., மத்திய அரசு திடீர் அரசாணை வெளியீடு!!

100 நாள் வேலை ஊதியம்

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி பறக்கும் படையினர் முலைமுடுக்கிலும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுசேரிக்கான 100 நாள் வேலை திட்ட ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ 294லிருந்து ரூ 319 ஆகா உயர்த்தப்பட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மகளிர் தினத்தன்று பாஜக அரசு சமையல் சிலிண்டர் விலையை குறைத்து அரசாணை வெளியிட்ட போது, தேர்தல் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில், இது மாதிரியான சலுகைகளை கொடுத்து மக்களின் வாக்குகளை பெற நினைப்பதாக எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் லோக்சபா தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சலுகையை அறிவித்ததால் பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

யூடியூபில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட வீடியோக்கள்.., இதுல இந்தியா தான் முதலிடமா?.., காரணம் என்ன தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *