சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி.., டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் இத்தனை லட்சம் பைன்? IPL நிர்வாகம் அதிரடி!!சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி.., டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் இத்தனை லட்சம் பைன்? IPL நிர்வாகம் அதிரடி!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு IPL நிர்வாகம் பைன் போடபட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடர் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சிஎஸ்கே அணி டெல்லி அணி மோதிய நிலையில், 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் வெற்றியின் முதல் கணக்கை தொடங்கிய நிலையில், நேற்று நடந்த போட்டியின் போது கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு அபராதம் விதித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டியில் டெல்லி அணிக்கு பைன் போடப்பட்டுள்ளது. சொல்ல போனால் ஒரு ஓவர் முடிந்த பிறகு அடுத்த ஓவருக்கு தயாராக நேரத்தை 10 வினாடிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 20 ஓவர்-களை வீசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர் குறைவாக வீசியதால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் ஊதியத்தில் ரூபாய் 12 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் குறைவாக வீசினாலே 20% அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எப்பா.., என்னா வெயிலு.., இந்த தேதியில் மழை கன்பார்ம்?.., சென்னை வானிலை மையம் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *