தமிழக மாணவர்களே.., இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவுதமிழக மாணவர்களே.., இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கான இறுதி தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து கோடை விடுமுறைக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று இரவில் இருந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கோவையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று (03.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். 

33 ஆண்டு அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்த மன்மோகன் சிங்.., விடை பெறுகிறார் முன்னாள் பிரதமர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *