மலையாள பட நடிகரை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த ரஜினிகாந்த்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!மலையாள பட நடிகரை ரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த ரஜினிகாந்த்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

மலையாள பட நடிகர் ஒருவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள இயக்குநரான ஆஷிக் அபு படைப்பில் வெளியான கேங்ஸ்டர் படம் மூலம் நடிகராக மாறியவர் தான் வினோத்.  அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தில் நடித்திருந்தார். இப்படி சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த வினோத் கடைசியாக  Nalla Nilavulla Rathri என்ற படத்தில் நடித்துள்ளார். அவர் நடிப்பை தாண்டி ரயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். நடிப்பு மேல் உள்ள மோகத்தால் படங்களில் நடிக்க தொடங்கினார். எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயலில் பணியில் இருந்தபோது, ரஜினிகாந்த் என்ற  பயணி ஒருவர் குடிபோதையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளார்.

இதை பார்த்த வினோத் அடுத்த ஸ்டேஷனில் இறங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், வினோத்தை ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இந்த சம்பவத்தின் போது வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். ஆற்றுப் பாலத்திற்கு அருகில் வினோத்தின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற ரயில் வினோத் மீது ஏறியதாக கூறப்படுகிறது. அவரின் இறப்பு மலையாள திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வினோத்தின் மரணத்திற்கு காரணமான ரஜினிகாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட குணாலின் மனைவி குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?.., அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *