காதலர்கள் கண் முன்னே காதலிகளை மோசம் செய்த 4 பேர் - விடிய விடிய கூட்டு பாலியல் வன்கொடுமை!காதலர்கள் கண் முன்னே காதலிகளை மோசம் செய்த 4 பேர் - விடிய விடிய கூட்டு பாலியல் வன்கொடுமை!

திண்டுக்கல் மாவட்டத்தில் காதலர்கள் கண் முன்னே காதலிகளை 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

தற்போதைய காலகட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காதலர்கள் கண் முன்னே காதலிகளை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 மகள்கள் இருக்கும் நிலையில்,  அதில்  19, 17 வயது சகோதரிகள் அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இடையகோட்டையில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்று, இதையடுத்து தனியார் ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது நான்கு மர்ம நபர்கள் காதலர்களை மிரட்டி பைக்கில் ஏற்றி சென்றுள்ளனர். அதன் பின்னர் இளைஞர்களை கட்டி போட்டு, அவர்கள் கண் முன்னாடி காதலிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து தப்பி ஓடிய அவர்கள் மீது காதலிகள்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிழல், இந்த கொடுமையை செய்தது னாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் (21), முத்தழகு பட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (22), பிரசன்ன குமார் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அதன்பின்னர் சரண்குமார், வினோத்குமார், சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தலைமறைவாக உள்ள பிரசன்ன குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திடீரென நியூயார்க் சிட்டியை உலுக்கிய நிலநடுக்கம் – கடும் பீதியில் பொதுமக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *