முக அழகிரி வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள்.., இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி?முக அழகிரி வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்த மர்ம நபர்கள்.., இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி?

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில்,  முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி வீட்டில் திருடர்கள் கொள்ளை அடிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முக்கிய புள்ளியாக இருந்து வந்தவர் தான் முக அழகிரி கருணாநிதி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக விளங்கி வந்த நிலையில், சில காரணத்தால் அவர் சிறிது காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அரசியலில் இருந்து தள்ளி இருந்தாலும்,இவரை குறித்து பல அரசியல் பேச்சுக்கள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருடைய மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது வரை தீவிர சிகிச்சையில் இருந்து வரும் அவரை சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார்.

மேலும் முக அழகிரி குடும்பம் தனது மகனின் சிகிச்சைக்காக சென்னையில் இருந்து வரும் நிலையில், மதுரையில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் திருடர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் முக அழகிரி க்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இங்கு பணியாளர்கள் தவிர்த்து மற்ற நபர்கள் யாரும் வந்து செல்வது இல்லை.

இதை தெரிந்து கொண்ட சில மர்ம நபர்கள் இரவு நேரத்தில் பண்ணை வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்கள் சென்ற போது திடீரென சத்தம் கேட்டதால் அங்கிருந்த காவலாளி உடனே உள்ளே சென்று பார்த்துள்ளார். காவலாளியை பார்த்த  மர்ம நபர்கள் தப்பி சென்றனர். எனவே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் எந்த நோக்கத்தில் கொள்ளை அடிக்க வந்தார்கள் என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணையில் இருந்து வருகிறது. 

சுற்றுலா பயணிகளே..,  திற்பரப்பு அருவியில் குளிக்க தடை.., மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *