பயணிகளே.., கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கம் - எந்தெந்த ஊருக்கு தெரியுமா?பயணிகளே.., கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கம் - எந்தெந்த ஊருக்கு தெரியுமா?

கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிய இருக்கும் நிலையில், தற்போது கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. இந்த கோடை விடுமுறை கொண்டாட  மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக எப்போது அரசு சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள்  இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு வாரந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் வழியாக நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.   மறுமார்க்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது – இது தான் காரணமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *