முதல்வர் என்பதால் எந்த ஒரு சிறப்பு சலுகையும் கிடையாது.., கெஜ்ரிவால் கைது செல்லும் - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!!முதல்வர் என்பதால் எந்த ஒரு சிறப்பு சலுகையும் கிடையாது.., கெஜ்ரிவால் கைது செல்லும் - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைது நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தரப்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் இ வெடித்தது. தேர்தலை முன்னிட்டு இப்படி முதல்வரை கைது செய்தது தவறு என்று அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே அரசை வழிநடத்தி வந்தார். இதனை தொடர்ந்து கைது நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

அதாவது, ” தேர்தல் நேரத்தை  முன்னிட்டு அமலாக்கத்துறை தன்னை கைது செய்துள்ளது என்று கெஜ்ரிவாலின் வாதத்தை ஏற்க முடியாது. குறிப்பாக மதுபான கொள்கை உருவாக்கத்தில் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி இருக்கிறார். அது மட்டுமின்றி அவரை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அமலாக்கத்துறையிடம் இருக்கிறது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அரசியல் பிரச்சனைகளை நீதிமன்றத்தின் முன்பு கொண்டு வர முடியாது என்றும், முதல்வர் என்பதால் கெஜ்ரிவாலுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகையும் வழங்க முடியாது  என கூறியுள்ளது. அதுமட்டுமின்றி  கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினர்  கைது செய்தது செல்லுபடியாகும் என தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்கும் பிக்பாஸ் Bully Gang – அப்ப ஏதோ ஒரு சம்பவம் இருக்கு?., போட்டோ வைரல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *