கள்ளக்காதலனுடன் உல்லாசம் - தடையாக இருந்த குழந்தைகள் - கொடூரமாக கொன்ற தாய்!!கள்ளக்காதலனுடன் உல்லாசம் - தடையாக இருந்த குழந்தைகள் - கொடூரமாக கொன்ற தாய்!!

கள்ள காதலனுக்காக ஒரு தாய் தான் பெற்றெடுத்த பிள்ளைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக கள்ளக்காதல் விவகாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கள்ளகாதலனுக்காக தாய்  ஒருவர் பெற்ற பிள்ளைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்த ஷீத்தல்(25) என்பவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். கணவன் மனைவிக்குள் எந்தவித கருத்து வேறுபாடு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் கணவர் வேலைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில், தனது குழந்தைகளுடன் விளையாட தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்ப முயன்றார். அப்போது அவரது மனைவி குழந்தைகள் அயர்ந்து தூங்குவதால் அவர்களை எழுப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் எந்தவித அசைவும் இன்றி சந்தேகப்பட்ட கணவன் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்தார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது ஷீத்தல் அதே பகுதியில் உள்ள ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த அவர், குழந்தைகள் தடையாக இருக்கும் என்று நினைத்து கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து ஷீத்தலை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. 

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் –  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *