சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் தங்க கட்டிகள் - அதிகாரிகள் விசாரணை!!சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் தங்க கட்டிகள் - அதிகாரிகள் விசாரணை!!

சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் தங்க கட்டிகள்: சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் அதிகமாக விமானங்கள் சென்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் தினதோறும் பயணித்து வருகின்றனர். எனவே எப்போதும் பரபரப்பாக இருக்கும் விமான நிலையத்தில் நேற்று இரவு தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து போது அதிர்ச்சி அடையும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது,  தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் போது அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்தபோது அதில் ஒரு பார்சல் இருந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

அதை எடுத்த ஊழியர் ஒருவர் விமான அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். அதை சோதனை செய்து பார்த்த போது  ரூ.75 லட்சம் மதிப்புள்ள 1,200 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தது. இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தங்க கட்டிகளை வெளிநாட்டில் இருந்து வந்த யாரோ பயணி ஒருவர் தான் போலீசில் சிக்கி கொள்வார் என்று  பயந்து குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது அதை யார் கொண்டு வந்தார் என்பதை அறிய சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *