ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் புட்பாய்சன் காரணமாக 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தபோது வெள்ளிக்கிழமையன்று சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் சாப்பிட்ட அந்த உணவால் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12 பேரில் ஒன்பது பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் மேலும் மூன்று நபர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் கோரேகான் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பிறகு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாக நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் முக ஸ்டாலின் – கையில் கஞ்சா பொட்டலத்துடன் வந்த பாஜக நிர்வாகி!!
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஹோட்டலில் சாப்பிட்டார்களா அல்லது தெரு ஒரே கடைகளில் சாப்பிட்டனரா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.