வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம் - என்ன காரணம் தெரியுமா?வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம் - என்ன காரணம் தெரியுமா?

வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம்: தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு,  புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களுக்கு வருகிற மே 1ம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம்  விடுத்திருந்தது. இந்நிலையில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ்நாடு,  புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களுக்கு வருகிற மே 1ம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை கொடுக்கப்பட்டதை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப வாபஸ் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவின் ஒரு சில பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மே 2ம் தேதி 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *