வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது - தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது - தேனி மாவட்டத்தில் பரபரப்பு!!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயற்சி செய்த இளைஞர் கைது: மக்களவை தேர்தல் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 1ம் தேதியில் முடிவடைய இருக்கிறது. மேலும் வாக்கு பதிவு எண்ணிக்கை முடிவுகள்  ஜூன் 4ம் தேதி வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நேற்று முன்தினம் (28.04.2024) நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற தேர்தல் அதிகாரி சோதனை செய்து புதிய சிசிடிவி  கேமராக்களை மாற்றினர். இந்நிலையில்  இன்று (30.04.2024) காலை 9 மணியளவில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவுக்கான தொலைக்காட்சியில் பழுது ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் தொழில்நுட்ப வல்லுனர்களால் சரி செய்யப்பட்டது. இந்நிலையில் தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

“டாப் குக்கு டூப் குக்கு” ஷோவில் என்ட்ரி கொடுக்கும் வடிவேலு? வெளியான முக்கிய தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *