ஆர் ஓ வாட்டர் பியூரிஃபையரை இந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் - வெளியான ஷாக்கிங் நியூஸ்!!ஆர் ஓ வாட்டர் பியூரிஃபையரை இந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் - வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

ஆர் ஓ வாட்டர் பியூரிஃபையரை இந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டாம்: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களது  வீடுகளில் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனமான ஆர் ஓ வாட்டர் பியூரிஃபையரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த சாதனம் வீடுகள் மட்டுமின்றி கல்லூரிகளிலும், பெரிய பெரிய வணிக வளாகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வாட்டர் இன்டஸ்ட்ரீஸ் ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”  தற்போது தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் இருந்து வருகிறது. இந்நிலையில் வருகிற மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் அடிக்க இருக்கிறது. எனவே ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

ஏனென்றால் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொழுது மெயின் பில்டர் விரைவில் பழுதாகிவிடும். எனவே மேலே  குறிப்பிட்ட நேரத்தில் ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையரை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு வாட்டர் இன்டஸ்ட்ரீஸ் ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்- குழந்தையின் கால்கள் பிய்ந்த கொடுமை – இறந்து பிறந்த சிசு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *