தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - எந்தெந்த மாவட்டம் தெரியுமா ?தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் - எந்தெந்த மாவட்டம் தெரியுமா ?

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. எனினும், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சோளிங்கரில் மலையேறிய பக்தர் உயிரிழப்பு ! 1200 வது படி ஏறிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி – பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் !

அதன்படி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *