சவுக்கு சங்கர் திடீர் கைது - நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது ஏற்பட்ட விபரீதம் - என்ன நடந்தது?சவுக்கு சங்கர் திடீர் கைது - நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது ஏற்பட்ட விபரீதம் - என்ன நடந்தது?

சவுக்கு சங்கர் திடீர் கைது: பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி பல்வேறு யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்கும் என்ற பெயரில் அரசியல் குறித்து பல கருத்துக்களை முன் வைத்து வருகிறார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, காவல்துறை அதிகாரிகள் பற்றியும், பெண் போலீஸ் பற்றியும் அவதூறாக பேசியுள்ளார்.

இதனை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் அவர் தங்கியிருப்பது காவல்துறைக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு போலீஸ் சென்று  கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வாகனத்தில் ஏற்றி சென்ற போது, லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சவுக்கு சங்கர் உட்பட சில காவல்துறைக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று மீண்டும் அதே வண்டியில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 

மதுரையில் இந்த பகுதியில் நாளை மின்தடை – எங்கெல்லாம் தெரியுமா? மின்சார வாரியம் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *