Home » செய்திகள் » ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி – பிரஜ்வால்  மீது  மேலும் ஒரு வழக்கு!

ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி – பிரஜ்வால்  மீது  மேலும் ஒரு வழக்கு!

ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி - பிரஜ்வால்  மீது  மேலும் ஒரு வழக்கு!

ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி: கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், ஹசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வால் மீது கடந்த சில நாட்களாக பாலியல் குற்றசாட்டுகள் எழுந்து வந்தது. குறிப்பாக பிரஜ்வால் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. அதுமட்டுமின்றி பல பெண்களை அவர் கொலை மிரட்டல் விடுத்து பாலியலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பிரஜ்வால் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து அவருடைய தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் புகார்கள் எழுந்த நிலையில், அவரை காவல்துறை கைது செய்து பெங்களூர் சிறையில் அடைத்தது. இந்நிலையில் ரேவண்ணாவுக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறை அவரை பெங்களூர் விக்டோரியா சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரஜ்வால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய பட்டியலை கர்நாடகா போலீசார் தயாரித்து வருகிறது. ரேவண்ணா மருத்துவமனையில் திடீர் அனுமதி

திருநெல்வேலி ஜெயக்குமார் கொலை வழக்கு – DNA பரிசோதனை – சிக்கிய அடுத்த துப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top