பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம் - தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு!பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம் - தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு!

தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் அரங்கேறியுள்ள நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகிற ஜூன் 1ம் தேதி முடிவடையும் இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பீகார் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடியாக மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார். அப்போது அவர் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைத்ததாக கூறப்படுகிறது. அதாவது சீதா பிறந்த பூமியான பீகாரில் பசுவதை செய்தால் அவர்களை தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு – Amit Shah controversial speech

குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ் – யூடியூபை கலக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *