பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு - பள்ளிக்கு தீ வைத்த உறவினர்கள்!!பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு - பள்ளிக்கு தீ வைத்த உறவினர்கள்!!

பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு: பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் 4 வயது சிறுவன் நேற்று காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

மேலும் சிறுவனை தேடும் பணியிலும் தீவிரமாக இருந்து வந்தனர். ஆனால் பள்ளிக்கு சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்ப வில்லை என்று தான் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அதனால் பள்ளி வளாகம் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் போலீசார் தீவிரமாக தேடினர். இதனை தொடர்ந்து சிறுவன் படித்த பள்ளிக்குள் சென்று பார்த்த காவல் துறைக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான் – மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அதாவது காணாமல் போன 4 வயது சிறுவன் பள்ளியில் சடலமாக கிடந்துள்ளார். உடனே காவல்துறை சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தனது பிள்ளையின் இழப்பை தாங்க முடியாத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பள்ளி வளாகம் மீதி தீயை வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி வெளியே நின்று கொண்டிருந்த வாகனங்கள் உட்பட தீயை வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பீகார் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு – bihar patna missing 4 year old boy dead body

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *