கொடைக்கானலில் படகுப் போட்டி  போட்டி ஒத்திவைப்பு -  தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு - வெளியான முக்கிய காரணம்?கொடைக்கானலில் படகுப் போட்டி  போட்டி ஒத்திவைப்பு -  தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு - வெளியான முக்கிய காரணம்?

கொடைக்கானலில் படகுப் போட்டி ஒத்திவைப்பு: தமிழகத்தில் அனைவருக்கும் பிடித்த டூரிஸ்ட் ஸ்பாட் என்றால் அது மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் தான். இங்கு கோடை விடுமுறையை கொண்டாட பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை திருவிழா தொடங்கியது. இந்த கோடை திருவிழா 10 நாட்கள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும். எனவே இதை காண அதிகமான மக்கள் கூட்டம் கூடுவார்கள்.

மேலும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான படகுப் போட்டி இன்று (21.05.2024) நடைபெற இருந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக படகுப் போட்டி  ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படகு போட்டி 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இவ்வளவு நாள் வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த நிலைக்கும், தற்போது மழையும் வாட்டி வதைக்கிறது என்று மக்கள் கூறி வருகின்றனர். கொடைக்கானலில் படகுப் போட்டி  போட்டி ஒத்திவைப்பு – kodaikanal boat race postponement – Kodai Lake-guna cave-Kodai Lake-Pillar Rocks-Kurinji Temple-list of tourist palces 2024

கேரளாவில் போதை பொருள் கடத்திய பிரபல மாடல் அழகி – கையும் களவுமாக பிடித்த காவல்துறை -6 பேர் கைது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *