ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு - என்ன காரணம் தெரியுமா?ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு - என்ன காரணம் தெரியுமா?

ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் எம்.எல். ஏ செல்லூர் ராஜு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியீட்டு இருந்தார். அதாவது இந்த பதிவில், ” நான் பார்த்து வியந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி தான் என்று புகழ்ந்து பதிவிட்டு இருந்தார்.  

இவர் வெளியிட்ட இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து எம்.எல். ஏ ராஜன் செல்லப்பா அவர்கள், இந்த பதிவு குறித்து பேசியதாவது, ” ராகுல் காந்தியை செல்லூர் ராஜு பாராட்டியது அவருடைய தனிப்பட்ட கருத்து. இதை அவர் அரசியல் ரீதியாக சொல்லிருக்க மாட்டார். இருந்தாலும் அந்த கருத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராஜன் செல்லப்பா, அதிமுக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இந்நிலையில் செல்லூர் ராஜு இந்த பதிவை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கினார். இருந்தாலும் அவரை பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு கொண்டு தான் இருக்கிறது. 

அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க தடை – போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!

ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு – sellur raju has removed the x twitter post of rahul gandhi -Today news in tamilnadu, Tamilnadu Latest News, Tamilnadu Politics News 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *