இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்!இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்!

இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்: தற்போது வங்காளதேசத்தில்  ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் ஆட்சி நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்த கட்சியில் இப்பொழுது MP ஆக இருந்து வருபவர் தான் அன்வருல் அசிம். இந்நிலையில் அன்வருல் அசிமுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவ சிகிச்சைக்காக  கடந்த 12ஆம் தேதி கொல்கத்தாவிற்கு வந்துள்ளார்.

அங்கு தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த அவர், அடுத்த நாள் வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. எனவே இது குறித்து அவருடைய நண்பர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக MPயை தேடி வந்தது. ஆனால் அவர் காணாமல் போய் 8 நாட்கள் ஆன நிலையில், இப்பொழுது வரை  வங்காள தேச எம்.பி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் தொடர்ந்து விசாரித்து வரும் காவல்துறை, ஒரு வேலை அவர் கொலை செய்யப்பட்டு  கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் அவரது உடலை வீசியிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது. இதனால் வங்காள தேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு – என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவுக்கு வந்த வங்காள தேச எம்.பி மாயம்! – bangladesh mp anwarul azim missing – tamilanadu news – india news – bangladesh latest news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *