கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - சமூக நலத்துறை அறிவிப்பு !கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - சமூக நலத்துறை அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி. கொரோனா தொற்று பரவலின் போது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளின் பெயரில் வங்கியில் தமிழ்நாடு அரசு சார்பில் வைப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் ரூ.429.47 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கிக்கணக்கில் வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த தொகையானது குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் போது அந்த பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

அதன்படி கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.19.01 கோடியும், கொரோனாவுக்கு தாய் அல்லது தந்தை என யாராவது ஒருவரை இழந்த 13,682 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.410.46 கோடியும் வங்கியில் தமிழ்நாடு அரசு சார்பில் பிக்சட் டெபாசிட் (வைப்பீடு) செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *