பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலில் 80 லட்சம் பாக்கி - வட்டியோட கேட்ட ஹோட்டல் நிர்வாகம்!!பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலில் 80 லட்சம் பாக்கி - வட்டியோட கேட்ட ஹோட்டல் நிர்வாகம்!!

பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலில் 80 லட்சம் பாக்கி: நாடு முழுவதும் அவ்வப்போது சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி. அந்த வகையில் கடந்த ஆண்டு 50 ஆண்டுகால புலித் திட்ட நிகழ்வைத் துவக்கி வைப்பதற்காக மோடி மைசூரு சென்றிருந்தார். அப்போது ரேடிசன் ப்ளூ பிளாசா என்ற  நட்சத்திர ஹோட்டலில் அன்று இரவு தங்கி இருந்து பொன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அந்த ஹோட்டலில் மோடி தங்குவதற்கு 80 லட்சம் ரூபாய் வாடகை கட்டணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை இப்பொழுது வரை கர்நாடகா வனத்துறை செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

பிரதமர் மோடி தங்கிய ஹோட்டலில் 80 லட்சம் பாக்கி

எனேவ ரேடிசன் ப்ளூ பிளாசா நிர்வாகம் தற்போது வாடகை பணத்தை கொடுக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வாடகை தாமதமாக செலுத்துவதற்காக  ஆண்டுக்கு 18% தாமத வட்டியாக ₹12.09 லட்சத்துடன் சேர்த்து பாக்கியை செலுத்த வேண்டும். அந்த பாக்கி பணத்தை ஜூன் 1க்குள்  செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. pm modi – prime minister modi – lok sabha election 2024

சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற நாய் Doge மரணம் – மீம்ஸ்களின் ராஜாவுக்கு என்ன ஆச்சு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *