பீகாரில் சுட்டெரிக்கும் வெப்ப நிலை: பள்ளி மாணவிகள் மயக்கம்… மருத்துவமனையில் அனுமதி!பீகாரில் சுட்டெரிக்கும் வெப்ப நிலை: பள்ளி மாணவிகள் மயக்கம்… மருத்துவமனையில் அனுமதி!

பீகாரில் சுட்டெரிக்கும் வெப்ப நிலை: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து சூரியன் சுட்டெரித்த நிலையில், இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெயில் சீசன் முடிந்து, மழை பொழிந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் வெயில் கொளுத்தி கொண்டு தான் இருக்கிறது. சொல்லப்போனால் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால்  உயிரிழப்பு  ஏற்படுகிறது. இந்நிலையில் டெல்லி, உ.பி., பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் கொளுத்துகிறது.

இதன்  காரணமாக அப்பகுதியில் வெப்ப காற்று வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல பயப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து பீகார் மாநிலம் செய்க்புரா என்ற பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவிகள் படித்து வந்த நிலையில் வெப்ப அலை வீசிய நிலையில் மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் சுட்டெரிக்கும் வெப்ப நிலை – bihar news – latest news – tamilnadu news – heat wave

பிரதமர் மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கிறாரா? அவரே சொன்ன முக்கிய தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *