கேரளாவில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக - திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி !கேரளாவில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக - திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி !

கேரளாவில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக. கேரளாவின் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியானது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக இருந்து வந்தது. தற்போது பாஜக முதல்முறையாக திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கே.முரளிதரனும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுனில்குமாரும் போட்டியிட்டனர். பாஜக சார்பில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி களமிறக்கப்பட்டார்.

இந்நிலையில் சுரேஷ் கோபியின் தீவிர பிரச்சாரம் காரணமாக அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அந்த வங்கியில் அனைத்து சுற்று வாக்குகளும் முடிவடைந்த நிலையில், சுரேஷ் கோபி 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி – ஜூன் 9 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு !

இந்த வெற்றியின் மூலம் கேரளாவில் இதுவரை வெற்றியே பெறாத பாஜக கட்சி முதல் முறையாக ஒரு இடத்தைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *