மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி - இன்று மாலை உரிமை கோருகிறது பாஜக !மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி - இன்று மாலை உரிமை கோருகிறது பாஜக !

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியாவில் 18 வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும்,காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

அந்த வகையில் மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சி வெறும் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.தனிபெரும்பான்மைக்கு 272 தொகுதிகளை எந்தக் கட்சியும் பெறாத நிலையில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11.30 மணி அளவில் கூடியது.

பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்தும், ஆட்சி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மத்தியில் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு !

அதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது.

அத்துடன் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *