திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை. வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில். அந்த வகையில் இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனையடுத்து நெல்லையப்பர் கோவிலில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா தேரோட்டம் வருகிற ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

நெல்லையப்பர் ஆனித் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது? சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட முக்கிய அறிக்கை!

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *