POCSO வழக்கில் சிக்கிய "த்ரிஷ்யம்" பட நடிகர்… ரசிகர்கள் ஷாக்!POCSO வழக்கில் சிக்கிய "த்ரிஷ்யம்" பட நடிகர்… ரசிகர்கள் ஷாக்!

Breaking News: POCSO வழக்கில் சிக்கிய “த்ரிஷ்யம்” பட நடிகர். மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான “த்ரிஷ்யம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ஜெயச்சந்திரன். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமான முகமாக இருக்கும் அவர் மீது தற்போது 4 வயது சிறுமியின் தாயார் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தகராறில் குழந்தையை தாக்கியதாகவும் புகார் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தாய் கொடுத்த புகாரின் பேரில் கோழிக்கோடு கசாபா காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் வழிகாட்டுதலில், போலீசார் குழந்தையின் வீட்டிற்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கின் மற்ற விவரங்கள் குறித்து அவர்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் மலையாளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. cinema news – POCSO case news – actors

எம்.பி-க்கள் பதவி பிரமாணம் எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *