ஏமன் கடலில் படகு மூழ்கி பயங்கர விபத்து -  49 பேர் உயிரிழப்பு … 140 பேர் மாயம்!ஏமன் கடலில் படகு மூழ்கி பயங்கர விபத்து -  49 பேர் உயிரிழப்பு … 140 பேர் மாயம்!

Yemen sea boat sank off ஏமன் கடலில் படகு மூழ்கி பயங்கர விபத்து: சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து ஏடன் வளைகுடா வழியாக சுமார் 250 அகதிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஏமன் கடற்கரை பகுதியில் போய் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக படகு நிலைதடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தது. அகதிகள் தண்ணீருக்குள்ளேயே தத்தளித்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு வந்த  தகவலறிந்து விரைந்த மீட்புக் குழுவினர், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

இந்த கோர விபத்தில்  6 குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட  தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 71 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான சுமார் 140 பேரை தேடும் பணி தீவிரமாகியுள்ளது. தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக  ஐ.நா-வின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது மேலும்   ஏமனில் 3,80,000 புலம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பெண்களே ஹேப்பி நியூஸ் –  இனி மாதம்  ரூ.1000 இல்ல ரூ.3000 – முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *