கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  3 பேர் பலி - 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!!கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  3 பேர் பலி - 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  3 பேர் பலி: தற்போதைய உலகத்தில் பெரும்பாலான மக்கள் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த குடியால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளது என்பது நாம் அறிவோம். இருப்பினும் நாளுக்கு நாள் மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இது ஒரு பக்கம் கடந்த சில மாதங்களாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணா புரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக புழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த  சுரேஷ், பிரவீன், சேகர் கள்ளச்சாராயம் குடித்த கொஞ்ச நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அந்த மூன்று பேரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். மேலும் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜிம்பாப்வே தொடரில் ரோஹித் – கோலி – பும்ராவுக்கு ஓய்வு … வெளியான முக்கிய காரணம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *