தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் - அதிமுக புறக்கணிப்பு !தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் - அதிமுக புறக்கணிப்பு !

தற்போது தமிழ்நாடு சட்டசபை மீண்டும் தொடக்கம் செய்யப்பட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளது.

தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் இரண்டு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சட்டசபையின் இன்றைய கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக புறக்கணித்து விட்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். தற்போது கேள்விநேரம் முடிந்ததும் உயர் கல்வித்துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *