புனே சொகுசு கார் விபத்து விவகாரம் - 17 வயது சிறுவனின் தந்தை, தாத்தா ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!புனே சொகுசு கார் விபத்து விவகாரம் - 17 வயது சிறுவனின் தந்தை, தாத்தா ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

Breaking news: புனே சொகுசு கார் விபத்து விவகாரம்: கடந்த மே மாதம் புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் மதுபோதையில் போர்சே ‘Porsche’1 என்ற சொகுசு காரை ஓட்டி சென்று மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.

இதற்கிடையில் சிறார் நீதிமன்றம் 15 மணி நேரத்தில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜாமீனை ரத்து செய்தது சிறார் நீதிமன்றம்.

இதனை தொடர்ந்து அந்த சிறுவனை காப்பாற்றுவதாக அவனது தாத்தா, தந்தை மற்றும் தாய் சில குளறுபடி வேலைகள் பார்த்த நிலையில், அவர்களையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

இதையடுத்து கொஞ்ச நாட்கள் தொடர்ந்து வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த ஜூலை 25ம் தேதி 17 வயது சிறுவனை விடுவிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: Education Scholarship 2024: ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை வேண்டுமா? அப்ப உடனே இதை செய்யுங்கள்!

இந்நிலையில்  விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை, தாத்தா ஜாமீன் வழங்கி புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

  1. pune porsche car accident issue latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *