நெப்போலியன் வீட்டில் நடக்க போகும் விசேஷம் - தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்த குடும்பம்!!நெப்போலியன் வீட்டில் நடக்க போகும் விசேஷம் - தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்த குடும்பம்!!

நடிகர் நெப்போலியன் வீட்டில் நடக்க போகும் விசேஷம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தவை. சொல்லப்போனால்  சீவலப்பேரி பாண்டியன், கிழக்கு சீமையிலே, விருமாண்டி, ஐயா அவரின் சினிமா கெரியரில் பேசப்பட்ட திரைப்படங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவில் இருந்து விலகிய அவர், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

அதில் குணால் என்பவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அவர் அமெரிக்காவுக்கு சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகினார்.

அங்கு தனியார் நிறுவனத்தை நிறுவிய அவர் தொடர்ந்து இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் வேலை வழங்கி வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஒரு சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

Also Read: பிக்பாஸ் ராஜுக்கு அடித்த சூப்பர் ஜாக்பாட் – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

அதாவது நெப்போலியனின் மூத்த மகனான  தனுஷிற்கு திருமணம் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ” எனது மூத்த மகன் தனுஷ்க்கும் அக்‌ஷயா என்கிற பெண்னுக்கும் நடைபெற இருக்கின்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தமிழக முதல்வருக்கு வழங்கினேன் என்று கூறியுள்ளார். actor napoleon – tamil cinema – kollywood cinema – dhanush news – marriage news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *