பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் - 25 மீனவர்களை விடுவிக்க கோரி  குடும்பங்கள் போராட்டம்!பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் - 25 மீனவர்களை விடுவிக்க கோரி  குடும்பங்கள் போராட்டம்!

பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்: ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களை எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைதைக் கண்டித்து, பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இருப்பினும் இப்பொழுது வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீனவ குடும்பங்கள் சேர்ந்து பாம்பன் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read: ஆளப்போறன் தமிழன் – இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளி பெண் – அட்ராசக்க!

அவர்களின் முக்கிய கோரிக்கையான கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கைப்பற்றிய  4 படகுகளையும் திருப்பி தர வேண்டும் என்று குடும்பங்கள் போராடி வருகின்றனர். அதை பார்த்த மற்ற மீனவ குடும்பத்தினர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

களஞ்சியம், ராஜன், ஜார்ஜ், கென்னடி, தாஸ், இருதயராஜ், செல்வம், இசக்கிமுத்து, கிராசியன், லியோனஸ், ஆரோக்கிய மெஹ்ரின், டிகாஸ், மெக்கெல், தயாளன், முருகன், சக்தி அந்தோணி, தேவதாஸ், லாரன்ஸ், சூசைராஜ் மற்றும் ஒரு நாட்டுப் படகு, அதிலிருந்த 6 மீனவர்கள் என 25 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *