"கோட்" மூவியில் கேப்டன் விஜயகாந்தை காட்ட கூடாது - பிரேமலதா அதிர்ச்சி பேட்டி!!"கோட்" மூவியில் கேப்டன் விஜயகாந்தை காட்ட கூடாது - பிரேமலதா அதிர்ச்சி பேட்டி!!

Box Office King vijay “கோட்” மூவியில் கேப்டன் விஜயகாந்தை காட்ட கூடாது: தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்1. தற்போது இவர் நடிப்பில் GOAT(கோட்) திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. தற்போது படத்தின் VFX பணிக்காக படக்குழு அமெரிக்காவில் இருந்து வருகிறது.

மேலும் இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI மூலமாக படத்தில் கொண்டு வர போவதாக படக்குழு தெரிவித்திருந்தது. இதற்காக விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவர்களிடம் அனுமதி வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இப்படி இருக்கையில் AI மூலம் விஜயகாந்தை பயன்படுத்த கூடாது என்று பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை திரையில் காட்டப்போவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வருகின்றனர்  .

அதுமட்டுமின்றி சிலர் இசை வெளியீட்டு விழாவிலும் ஓப்பனாக பேசி வருகின்றனர். எங்களிடம் அனுமதி வாங்காமல் விஜயகாந்தை திரையில் காட்ட முடியாது.

Also Read: “நாடோடிகள் 2” பட நடிகை வீட்டில் திருட்டு – அடக்கடவுளே… இதையெல்லாமா திருடுவாங்க? – 2 பேர் கைது!

அதற்கு முன் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் படத்தில் விஜயகாந்தை காட்ட போகிறோம் என்று அனுமதி கேட்டு யாரும் வரவில்லை.

எனவே அனுமதி இல்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

  1. Thalapathy vijay latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *