நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது - என்ன காரணம் தெரியுமா?நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது - என்ன காரணம் தெரியுமா?

NTK Party News: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது: நேற்று நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து சாட்டை துரைமுருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியை பற்றி சில அவதூறான கருத்துக்களை முன் வைத்து பேசியதாக கூறி , அவர் மீது தற்போது திமுகவினர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் போலீஸ் சாட்டை துரைமுருகனை தேடி வந்தது.

இதையடுத்து நெல்லை, குற்றாலம் வீராணம் பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Also Read: தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் சிறு மாற்றம்: மின்சார வாரியம் அறிவிப்பு!

இது போன்று அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சில நாட்களிலே ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இம்முறை அவருக்கு ஜாமீன் கிடைக்கிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *