புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை - இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை - இவர் மீது 70க்கும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் !

தற்போது புதுக்கோட்டையில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் தற்போது சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை பிடிப்பதற்காக போலீசார் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து போலீஸ் வருவதை அறிந்த ரவுடி துரை பிடிக்க சென்ற போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரவுடி துரையை துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் பிடிக்க முயன்றபோது போலீசாரை ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது – என்ன காரணம் தெரியுமா?

மேலும் ரவுடி துரை என்கிற துரைசாமி மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் ரவுடி துரை சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதால் அவர் மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் திருட்டு உள்பட 70 வழக்குகள் உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *