பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை - வெளியான அதிர்ச்சி காரணம்!பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை - வெளியான அதிர்ச்சி காரணம்!

Kollywood news: பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை: தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் கூட ஒரு சில இயக்குனர்களை நம்மால் மறக்க முடியாது. அந்த வகையில் ஒரே படத்தில் ஓஹோன்னு உயர்ந்த இயக்குனர் தான் ரவி ஷங்கர். இவர் னோஜ், குணால் நடிப்பில் வெளிவந்த “வருஷமெல்லாம் வசந்தம்” என்ற படத்தை இயக்கி இருந்தார்.

இதில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் இப்பொழுது வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர் இயக்குனர் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி சூரிய வம்சம் படத்தில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.

பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை - வெளியான அதிர்ச்சி காரணம்!
பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை – வெளியான அதிர்ச்சி காரணம்!

Also Read: “மூக்குத்தி அம்மன் 2” படத்தில் அம்மனாக நடிக்க போவது யார்? – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

இந்நிலையில் இவர் குறித்து தற்போது சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சென்னை கே கே நகரில் வாழ்ந்து வரும் இயக்குனர் ரவி ஷங்கர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது இறப்புக்குப் திரைத்துறையினர்  பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *